என் மலர்
செய்திகள்

கைது செய்யப்பட்ட முகமது அஷ்ரப், அருண்குமார்
தொழிற்சாலையில் கார்களை திருடி விற்ற 2 ஊழியர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கார்களை திருடி விற்ற 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு குன்றத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்கிற முகமது அஷ்ரப் தண்டையார் பேட்டையை சேர்ந்த அருண் குமார் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தொழிற்சாலையில் இருந்த 2 புதிய கார்கள் திடீரென மாயமானது. இது குறித்து அதிகாரிகள் ஒரகடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கார்களை திருடி விற்றதாக அதே தொழிற்சாலையில் வேலை பார்த்த மாரிமுத்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நூதன முறையில் கார்களை தொழிற்சாலையில் இருந்து திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.
மாரிமுத்து தொழிற்சாலை யார்டு பகுதியில் இருந்த கார்களை போலியாக அனுமதி (பாஸ்) தயாரித்து வெளியே எடுத்து வந்து இருக்கிறார். பின்னர் வெளியே வந்த கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களின் காரின் பதிவு எண் போன்று போலி நம்பர் பிளேட்டை காரில் பொருத்தி வெளியே கொண்டு சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் திருடிய ஒரு காரை ரூ.6 லட்சத்துக்கு விற்று உள்ளார். கைதான 2 பேரிடம் இருந்தும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு குன்றத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்கிற முகமது அஷ்ரப் தண்டையார் பேட்டையை சேர்ந்த அருண் குமார் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தொழிற்சாலையில் இருந்த 2 புதிய கார்கள் திடீரென மாயமானது. இது குறித்து அதிகாரிகள் ஒரகடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கார்களை திருடி விற்றதாக அதே தொழிற்சாலையில் வேலை பார்த்த மாரிமுத்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நூதன முறையில் கார்களை தொழிற்சாலையில் இருந்து திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.
மாரிமுத்து தொழிற்சாலை யார்டு பகுதியில் இருந்த கார்களை போலியாக அனுமதி (பாஸ்) தயாரித்து வெளியே எடுத்து வந்து இருக்கிறார். பின்னர் வெளியே வந்த கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களின் காரின் பதிவு எண் போன்று போலி நம்பர் பிளேட்டை காரில் பொருத்தி வெளியே கொண்டு சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் திருடிய ஒரு காரை ரூ.6 லட்சத்துக்கு விற்று உள்ளார். கைதான 2 பேரிடம் இருந்தும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






