என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விடைத்தாள் மதிப்பீட்டில் ஊழல்: சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் கல்லூரி முதல்வர்-பேராசிரியர் ஆஜர்
சென்னை:
அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் 500-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் செமஸ்டர் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுமதிப்பீட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னணி குறித்து விசாரித்த போது மறு மதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமானது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் நடத்தினர்.
திண்டிவனத்தில் உள்ள மறுமதிப்பீட்டு மையத்தில் வைத்தே இந்த முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. இதனை தொடர்ந்து மையம் செயல்பட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமாருக்கு ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று பேராசிரியர்கள் இருவரும் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் மறுமதிப்பீடு ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்