என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை
Byமாலை மலர்27 Aug 2018 8:05 AM GMT (Updated: 27 Aug 2018 8:05 AM GMT)
புதுக்கோட்டை அருகே இன்று பட்டப்பகலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மனைவி யாசினி (வயது 27). கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று விட்டார். இதனால் யாசினி ஒக்கூரில் உறவினர்கள் ஆதரவுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் யாசினிக்கும் அவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த சிராஜூதீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இன்று மதியம் யாசினி வீட்டிற்கு வந்த சிராஜூதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் யாசினியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சிராஜூதீனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யாசினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிராஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிராஜூதீன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாசினி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மனைவி யாசினி (வயது 27). கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று விட்டார். இதனால் யாசினி ஒக்கூரில் உறவினர்கள் ஆதரவுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் யாசினிக்கும் அவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த சிராஜூதீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இன்று மதியம் யாசினி வீட்டிற்கு வந்த சிராஜூதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் யாசினியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சிராஜூதீனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யாசினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிராஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிராஜூதீன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாசினி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X