search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாலை தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    பஞ்சாலை தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்

    ஊதிய உயர்வு, புதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு உட்பட்ட பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவையில் 5 இடங்களிலும் காளையார் கோவில், கமுதக்குடி ஆகிய 2 இடங்கள் உள்பட மொத்தம் 7 ஆலைகள் இயங்கி வருகின்றது.

    இங்கு 4000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளார்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தொழிற் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று 6-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சி.எஸ். டபிள்யு. மில் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×