என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லணை கொள்ளிடம் பாலத்தில் அறிவிப்புகளை மீறி செல்பி எடுக்கும் பொதுமக்கள்
Byமாலை மலர்18 Aug 2018 7:43 AM GMT (Updated: 18 Aug 2018 7:43 AM GMT)
கல்லணை கொள்ளிடம் பாலத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். #Kollidambridge
பூதலூர்:
கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டுள்ளது. கல்லணையை பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கேற்பு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் செயல்பட்டுவந்தனர்.
பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாலத்தில் எட்டி பார்க்காதீர்கள், செல்பி எடுக்காதீர்கள், ஆற்றில் இறங்காதீர்கள் என்ற அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போல் கல்லணையை பார்க்கும் ஆவலில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதியில் இருந்து வருபவர்கள் கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் பாலத்தில் வந்து விடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கல்லணையில் ஆங்காங்கு ஆற்றில் இறங்குவது ஆபத்தானது, செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். காற்றும் வேகமாக வீசும் நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நின்று இளம் பெண்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசாரும், அதிகாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். #Kollidambridge
கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டுள்ளது. கல்லணையை பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கேற்பு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் செயல்பட்டுவந்தனர்.
பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாலத்தில் எட்டி பார்க்காதீர்கள், செல்பி எடுக்காதீர்கள், ஆற்றில் இறங்காதீர்கள் என்ற அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போல் கல்லணையை பார்க்கும் ஆவலில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதியில் இருந்து வருபவர்கள் கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் பாலத்தில் வந்து விடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கல்லணையில் ஆங்காங்கு ஆற்றில் இறங்குவது ஆபத்தானது, செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். காற்றும் வேகமாக வீசும் நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நின்று இளம் பெண்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசாரும், அதிகாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். #Kollidambridge
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X