என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. செயற்குழுவில் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பு
Byமாலை மலர்13 Aug 2018 9:47 AM GMT (Updated: 13 Aug 2018 9:47 AM GMT)
தி.மு.க. செயற்குழுவில் தலைமை செயற்குழு உறுப்பினர்களுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் 19 அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். #DMK
சென்னை:
கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்களுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் 19 அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தலைமை கழக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவராக்க ஒருமித்த முடிவு எடுப்பதுடன் அடுத்த கட்டமாக பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. #DMK
கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்களுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் 19 அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தலைமை கழக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மு.க.ஸ்டாலினை கட்சித் தலைவராக்க ஒருமித்த முடிவு எடுப்பதுடன் அடுத்த கட்டமாக பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X