search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - தினகரன்
    X

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - தினகரன்

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று டிடிவி. தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran

    கும்பகோணம்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதி தங்கியிருந்த தினகரன் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபகாலமாக முட்டையில் முறைகேடு, மதிப்பெண்ணில் முறைகேடு, கோவில் சிலைகளில் முறைகேடு என ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழலில் தமிழகம் சிக்கியுள்ளது. அம்மாவின் பேரைச் சொல்லிக் ஏமாற்றும் இந்த ஆட்சி அம்மாவின் கொள்கையில் இருந்து தடம் மாறிச் செல்கின்றனர். இந்த சுயநல கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். எனவே தேர்தலின் மூலம் இந்த ஆட்சி அகற்றப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைதொடர்ந்து ரகுபதி கமி‌ஷன் கலைக்கப்பட்டது குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தினகரன் கூறுகையில் , ‘‘இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும்’’ என்றார் .

    இதன் பின்னர் சுவாமிமலையில் இருந்து மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். #Dhinakaran

    Next Story
    ×