search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி
    X
    கைதான ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி

    மாணவிகளுக்கு பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கை முறையே 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜ்குமார் முத்துப் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×