search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ கால் மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இன்ஸ்பெக்டர்
    X

    வீடியோ கால் மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இன்ஸ்பெக்டர்

    குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    நாகர்கோவில்:

    சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அதிகாரிகள் குறித்த சர்ச்சையான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு போலீ்ஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரின் ஆபாச பேச்சு வீடியோ காட்சிகள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அந்த வீடியோ, 2 பகுதிகளாக வெளியாகி உள்ளது. முதல் வீடியோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் டிப்-டாப்பாக காட்சி அளிக்கிறார். தனது செல்போன் மூலம் அவர் ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்கிறார்.

    எதிர்முனையில் பேசிய பெண்ணின் படம் தெரியாத அளவுக்கு வீடியோவில் மறைக்கப்பட்டு உள்ளது. பேச்சின் இடையே அந்த இன்ஸ்பெக்டர் மிகவும் ஆபாசமாக பெண்ணிடம் பேசுகிறார்.

    அடுத்த வீடியோவில் அந்த இன்ஸ்பெக்டர் சீருடையை கழற்றி விட்டு அரை நிர்வாண நிலையில் கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த இளம்பெண்ணுடன் மீண்டும் தனது ஆபாச பேச்சை தொடருகிறார். இந்த முறை ஆபாச செய்கைகள் எல்லை மீறுகின்றன.

    சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோக்கள், குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இது குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×