என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-காண்டிராக்டர் ரட்சகன் வி‌ஷம் குடித்து விட்டு கமி‌ஷனரின் கார் முன் படுத்து மறியல் செய்தபோது எடுத்தபடம்.
    X
    சப்-காண்டிராக்டர் ரட்சகன் வி‌ஷம் குடித்து விட்டு கமி‌ஷனரின் கார் முன் படுத்து மறியல் செய்தபோது எடுத்தபடம்.

    கடலூரில் நகராட்சி அலுவலகத்தில் காண்டிராக்டர் தற்கொலை முயற்சி

    கடலூர் நகரசபை அலுவலகத்தில் சப்-காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கங்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற ரட்சகன்(வயது 42). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு முகேஷ் என்ற மகன் உள்ளான்.

    ரட்சகன் கடலூர் நகராட்சியில் பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் சப்-காண்டிராக்டர் எடுத்து பணி மேற்கொண்டு வந்தார். பணிகள் முடிந்த பிறகு இவருக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்து பணம் எதுவும் வழங்கப்படவில்லை. ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ரட்சகன் நகராட்சி அலுவலகம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பணம் எதுவும் அவருக்கு வழங்கப் படவில்லை.

    இதனால் ரட்சகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இன்று காலை ரட்சகன் தனது மனைவி ராதிகா, மகன் முகேஷ் ஆகியோருடன் பணத்தை கேட்பதற்காக கடலூர் நகரசபைக்கு வந்தார்.

    அப்போது ரட்சகன் தனது சட்டைப்பையில் வி‌ஷப்பாட்டில் வைத்திருந்தார். நகரசபை அலுவலகத்தில் இருந்து கமி‌ஷனர் சரவணன் வெளியே வந்து தனது காரில் ஏற முயன்றார். அப்போது அங்கு நின்ற ரட்சகன் திடீரென்று வி‌ஷபாட்டில் எடுத்து குடித்து கமி‌ஷனர் கார் முன்படுத்து உருண்டு மறியல் செய்தார்.

    வி‌ஷம் குடித்ததால் அவர் அங்கேயே ரத்த வாந்தி எடுத்தார்.

    இதுகுறித்து புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வி‌ஷம் குடித்திருந்த ரட்சகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த அவரது மனைவி ராதிகாவையும் கணவருடன் செல்லுமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று கூறி அவர் நகரசபை வாசலில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ராதிகாவிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர் கணவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    கடலூர் நகரசபை அலுவலகத்தில் சப்-காண்டிராக்டர் வி‌ஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×