search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது - ஜி.கே.வாசன்
    X

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது - ஜி.கே.வாசன்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GKVasan #TNPSCExam

    மதுரை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சரோ, சம்பந்தப்பட்ட துறையே இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்தன. அதன் பயனாகத்தான் நமக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கிடைத்துள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தனியார் மூலம் நடத்த அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் பல குளறுபடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    மாநில அரசு நிதி நெருக்கடி என கூறியுள்ளது. ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அதற்கு முன் போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #GKVasan #TNPSCExam

    Next Story
    ×