search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்
    X

    தேனி அருகே கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்

    தேனி அருகே கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தம பாளையம் சின்னஓபுலாபுரம் வரதராஜபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லதா(வயது38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விசயம் முத்துச்சாமிக்கு தெரியவரவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    கள்ளக்காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என லதா நினைத்தார். எனவே தனது 13 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

    கடந்த 20-ந்தேதி ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து முத்துச்சாமி ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜ்குமார், லதா, தமிழன், ஈஸ்வரி ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×