என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்: ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறி விட்டது- ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.
Byமாலை மலர்21 Jun 2018 10:19 AM GMT (Updated: 21 Jun 2018 10:19 AM GMT)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் அம்மா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
எய்ம்ஸ் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை தோப்பூரில் உள்ளது என்றும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளிடமும் கோரிக்கை வைத்தார்.
இப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசை நிறைவேறி விட்டது.
நாட்டின் முக்கிய நகரமாக மதுரையும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #AIIMS
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் ஜெயலலிதா ஆசை நிறைவேறி உள்ளதாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் அம்மா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
எய்ம்ஸ் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை தோப்பூரில் உள்ளது என்றும் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளிடமும் கோரிக்கை வைத்தார்.
இப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசை நிறைவேறி விட்டது.
நாட்டின் முக்கிய நகரமாக மதுரையும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. எய்ம்ஸ் அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #AIIMS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X