என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
Byமாலை மலர்1 Jun 2018 8:08 AM GMT (Updated: 1 Jun 2018 8:08 AM GMT)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் வந்தது.
30-ந் தேதி வினாடிக்கு 5ஆயிரத்து 60 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 5ஆயிரத்து 429 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் நேற்று முதல் சரிந்து வருகிறது.
நேற்று காலை 4 ஆயிரத்து 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 628 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்திறப்பை காட்டிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 36.72 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 37.33 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 37.69 அடியாக உயர்ந்து உள்ளது.
இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 800 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் வந்தது.
30-ந் தேதி வினாடிக்கு 5ஆயிரத்து 60 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 5ஆயிரத்து 429 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் நேற்று முதல் சரிந்து வருகிறது.
நேற்று காலை 4 ஆயிரத்து 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 628 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்திறப்பை காட்டிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 36.72 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 37.33 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 37.69 அடியாக உயர்ந்து உள்ளது.
இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 800 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X