search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது
    X

    கடலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிரோடு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, ஆல்பேட்டையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர துணை செயலாளர் சிலம்பு என்கிற சிலம்பரசன் அங்கு வந்தார்.

    கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கோ‌ஷமிட்டார். பின்னர் அவர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது பற்றி பஸ் டிரைவர் மணவளவன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி சிலம்பு என்கிற சிலம்பரசன் மீது போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×