search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து ஊத்தங்கரையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #BanSterlite

    ஊத்தங்கரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் க.ஈழமுரசு, மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன், விஷ்வா, செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். #SterliteProtest #BanSterlite

    Next Story
    ×