என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Byமாலை மலர்22 May 2018 5:06 AM GMT (Updated: 22 May 2018 5:06 AM GMT)
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடியில் உள்ள 65 வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பிரைண்ட் நகர், திரேஸ்புரம், அண்ணாநகர் தெர்மல் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி, புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சிறிய பெட்டி கடைகள், பால் பூத்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
இதே போல ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதி, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. புதியம்புத்தூர் பகுதியிலும் பிரதான வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்திலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.
தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தபட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடியில் உள்ள 65 வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பிரைண்ட் நகர், திரேஸ்புரம், அண்ணாநகர் தெர்மல் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி, புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சிறிய பெட்டி கடைகள், பால் பூத்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
இதே போல ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதி, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. புதியம்புத்தூர் பகுதியிலும் பிரதான வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்திலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.
தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தபட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X