search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ்
    X
    தினேஷ்

    மதுக்கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவர் 1,024 மதிப்பெண்கள் பெற்றார்

    நெல்லையில் டாஸ்மாக்கை மூடக்கோரி தற்கொலை செய்துகொண்ட மாணவர் தினேஷ் பிளஸ்-2 தேர்வில் 1,024 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (வயது 17). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினேஷ் நல்லசிவம் பலமுறை சொல்லியும் அவர் திருந்தவில்லை. எனவே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தாத தந்தையை கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த 2-ந் தேதி தினேஷ் நல்லசிவம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் தினேஷ் நல்லசிவம் 1,200-க்கு 1,024 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாடசாமி, இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே என்று கூறி கதறி அழுதார்.

    Next Story
    ×