என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் நாளை மறுநாள் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் மியூசியத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
Byமாலை மலர்15 May 2018 9:50 AM GMT (Updated: 15 May 2018 9:50 AM GMT)
கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார்.
கோவை:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918-ம் ஆண்டு ஹமில்டன் என்ற போலீஸ் அதிகாரி ஹமில்டன் கிளப்பை கட்டினார். பின்னர் 1951-ம் ஆண்டு தமிழக போலீசிடம் இந்த கட்டிடம் கொடுக்கப்பட்டது.
இதில் உள்ள 18 அறைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கி இருந்தனர். இந்தநிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் இந்த கட்டிடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அதில் போலீஸ் மியூசியம் அமைக்க திட்டமிட்டார். இதனையடுத்து இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் மியூசியமாக மாற்றப்பட்டது.
இங்கு கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன் படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், துப்பாக்கி தயாரிக்கும் எந்திரம், 1958-ம் ஆண்டு கோவையை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம், சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், மலையூர் மம்மட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணைகள், வெடிகுண்டு நிபுணர்கள் பயன்படுத்தும் உடைகள், கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (17-ந் தேதி) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918-ம் ஆண்டு ஹமில்டன் என்ற போலீஸ் அதிகாரி ஹமில்டன் கிளப்பை கட்டினார். பின்னர் 1951-ம் ஆண்டு தமிழக போலீசிடம் இந்த கட்டிடம் கொடுக்கப்பட்டது.
இதில் உள்ள 18 அறைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கி இருந்தனர். இந்தநிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் இந்த கட்டிடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அதில் போலீஸ் மியூசியம் அமைக்க திட்டமிட்டார். இதனையடுத்து இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் மியூசியமாக மாற்றப்பட்டது.
இங்கு கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன் படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், துப்பாக்கி தயாரிக்கும் எந்திரம், 1958-ம் ஆண்டு கோவையை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம், சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், மலையூர் மம்மட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணைகள், வெடிகுண்டு நிபுணர்கள் பயன்படுத்தும் உடைகள், கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (17-ந் தேதி) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X