என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேட்புமனு பரிசீலனையில் குளறுபடி - காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கியில் தி.மு.க.-பா.ம.க. முற்றுகை
காஞ்சீபுரம்:
பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கியில் கூட்டுறவு தேர்தல் வேட்பு மனுதாக்கல் கடந்த 30-ந்தேதி நடந்தது. 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க.வினர் மொத்தம் 35 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 15 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தேர்தல் அதிகாரி வராததையும், முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை என்று கண்டித்தும் தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் வங்கியை முற்றுகையிட்டனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் வ.உமாபதி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#CooperativeSocietieselection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்