என் மலர்
செய்திகள்

கடலூரில் கடற்கரையோரத்தில் ஒதுங்கிய திமிங்கலத்தையும், பாம்பையும் படத்தில் காணலாம்.
கடல் சீற்றத்தால் கடலூர் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கிய அரிய வகை பாம்புகள்
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடலூர் கடற்கரையில் அரிய வகை பாம்புகள் உயிருடன் ஒதுங்கியது.
கடலூர்:
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. காலையில் சீற்றம் இல்லாமல் அலைகள் அமைதியாக இருந்து வருகிறது.
ஆனால் கடலூர் தாழங்குடா கடற்கரை ஓரத்தில் இன்று காலை ஆழ்கடல் பவளப்பாறையில் வசிக்கும் பாம்புகள் உயிருடன் கரையில் ஊர்ந்து சென்றன.
இதனை காலையில் கடற்கரையோரமாக நடந்து சென்ற மீனவர்கள் பார்த்து செல்போனில் படம் எடுத்தனர். மேலும் இத்தகவல் மீனவர் பகுதி மக்களுக்கு தெரிந்தவுடன் அனைவரும் கடற்கரை பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் இந்த அரியவகை பாம்புகளை பிடித்து மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டாலும் அவை கரையை நோக்கியே வந்தது.

மேலும் தாழங்குடா பகுதியில் அழுகிய நிலையில் இன்று காலை ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த அரிய வகை பாம்புகள் மற்றும் இறந்த திமிங்கலம் கரைஒதுங்கி இருக்கலாம். இந்த அரியவகை பாம்புகள், நாங்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது ஏதோ ஒரு சில நாட்களில் பார்ப்போம்.
மற்ற நாட்களில் இந்த வகை பாம்புகளை பார்க்க முடியாது. பெரும்பாலும் இந்த வகை பாம்புகள் பவளபாறைகள் அருகில் இருந்து வரும். தற்போது கடற்கரையில் நாங்கள் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியம் கலந்து சந்தோஷமாக இருந்து உள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் பல்வேறு மாவட்டங்களில் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. காலையில் சீற்றம் இல்லாமல் அலைகள் அமைதியாக இருந்து வருகிறது.
ஆனால் கடலூர் தாழங்குடா கடற்கரை ஓரத்தில் இன்று காலை ஆழ்கடல் பவளப்பாறையில் வசிக்கும் பாம்புகள் உயிருடன் கரையில் ஊர்ந்து சென்றன.
இதனை காலையில் கடற்கரையோரமாக நடந்து சென்ற மீனவர்கள் பார்த்து செல்போனில் படம் எடுத்தனர். மேலும் இத்தகவல் மீனவர் பகுதி மக்களுக்கு தெரிந்தவுடன் அனைவரும் கடற்கரை பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் இந்த அரியவகை பாம்புகளை பிடித்து மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டாலும் அவை கரையை நோக்கியே வந்தது.

மேலும் தாழங்குடா பகுதியில் அழுகிய நிலையில் இன்று காலை ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த அரிய வகை பாம்புகள் மற்றும் இறந்த திமிங்கலம் கரைஒதுங்கி இருக்கலாம். இந்த அரியவகை பாம்புகள், நாங்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது ஏதோ ஒரு சில நாட்களில் பார்ப்போம்.
மற்ற நாட்களில் இந்த வகை பாம்புகளை பார்க்க முடியாது. பெரும்பாலும் இந்த வகை பாம்புகள் பவளபாறைகள் அருகில் இருந்து வரும். தற்போது கடற்கரையில் நாங்கள் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியம் கலந்து சந்தோஷமாக இருந்து உள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






