என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மீண்டும் தொடர் போராட்டம்
உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்த போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Hydrocarbon #protest
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வாணகன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனை கண்டித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 கட்டங்களாக 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் குழாய்களை 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தது.
ஆனால் 1 வருடம் கடந்த நிலையில், இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஏப்ரல் 12 முதல் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதால் நேற்று முதல் நடைபெற இருந்த ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 3-ந்தேதி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெண்டரில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நாளை மறுநாள் அடுத்த கூட்டம் நெடுவாசலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த தகவல்கள், போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்ப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இது குறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும் தமிழர் நல பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான நெடுவை பழ.திருமுருகன் கூறியதாவது:-
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நகல் கிடைத்ததும் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாளை மறுநாள் 15-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டம் நடத்தினால் எங்கள் மீது அரசின் கவனம் திரும்பாது.
அதனால் தமிழக அரசு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தால் எங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறோம்.
எனவே நாளை மறுநாள் நடைபெறும் கலந்தாலோசனை கூட்டத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடர் போராட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Hydrocarbon #protest
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வாணகன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனை கண்டித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 கட்டங்களாக 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் குழாய்களை 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தது.
ஆனால் 1 வருடம் கடந்த நிலையில், இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஏப்ரல் 12 முதல் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதால் நேற்று முதல் நடைபெற இருந்த ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 3-ந்தேதி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெண்டரில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நாளை மறுநாள் அடுத்த கூட்டம் நெடுவாசலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த தகவல்கள், போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்ப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இது குறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும் தமிழர் நல பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான நெடுவை பழ.திருமுருகன் கூறியதாவது:-
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நகல் கிடைத்ததும் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாளை மறுநாள் 15-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டம் நடத்தினால் எங்கள் மீது அரசின் கவனம் திரும்பாது.
அதனால் தமிழக அரசு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தால் எங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறோம்.
எனவே நாளை மறுநாள் நடைபெறும் கலந்தாலோசனை கூட்டத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடர் போராட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Hydrocarbon #protest
Next Story






