என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி
காட்பாடி அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் - மைசூர் எக்ஸ்பிரஸ் தப்பியது
By
மாலை மலர்2 March 2018 5:50 AM GMT (Updated: 2 March 2018 5:50 AM GMT)

காட்பாடி அருகே உள்ள திருவலம் ரெயில் நிலையம் அருகில் வந்த போது தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை என்ஜீன் டிரைவர் கவனித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேலூர்:
சென்னையில் இருந்து இன்று காலை பெங்களூரு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது.
காட்பாடி அருகே உள்ள திருவலம் ரெயில் நிலையம் அருகில் வந்த போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் அங்கேயே நின்றது. இதனை தொடர்ந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து வேலூருக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயிலில் தவித்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. #tamilnews
சென்னையில் இருந்து இன்று காலை பெங்களூரு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது.
காட்பாடி அருகே உள்ள திருவலம் ரெயில் நிலையம் அருகில் வந்த போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் அங்கேயே நின்றது. இதனை தொடர்ந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து வேலூருக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயிலில் தவித்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
