என் மலர்
செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு அமைச்சர்களுக்கு பணமா?: யாராக இருந்தாலும் நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம்
துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக திருநாவுக்கரசர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆலந்தூர்:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- காவிரி விவகாரத்தில் என்ன மாதிரியான ஆலோசனை நடத்தப்பட்டது?
பதில்:- காவிரியில் கர்நாடகத்திடம் இருந்து இந்த வருடம் தமிழகத்துக்கு 81 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டிய பாக்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பட்ட பயிர் களுக்கு தண்ணீர் அவசியமாக தேவைப்படுகிறது. அவர்களுக்கு தரவேண்டிய கடமை இருக்கிறது. அதை கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதை கேட்டதற்கு மறுத்து உள்ளார்கள். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- காவிரி தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் தேவை என்றால் கடல் நீரை சுத்தி கரித்து பயன்படுத்தலாம் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?
பதில்:- 17 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தீவிர விசாரித்து வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின்படி நமக்கு உரிமை இருக்கிறது. சுப்பிரமணியசாமி அவ்வாறு கூறியிருந்தால் அதற்கான காரணத்தை அவர்தான் கூறவேண்டும்.
கேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து அரசு துறை ஊழியர்கள் போராட்டங்களை அறிவித்து உள்ளார்களே?
பதில்:- 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. நிர்வாகத்தில் பல சிரமங்களை பெறவேண்டிய நிலை உள்ளது. இவைகளை தவிர்த்து பஸ் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டிய நிலை உள்ளது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் அண்டை மாநிலங்களை விட குறைவாகத்தான் இருக்கிறது.
கேள்வி:- தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்துக்கான உரிமைகளை கேட்டு பெறாமல் ஆடு, மாடுகள் போல் செயல்படுகிறார்கள் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?
பதில்:- சுப்பிரமணியசாமி சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?.
கேள்வி:- துணை வேந்தர்கள் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் தரப்படுவதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே?
பதில்:- விசாரணையில் ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது எதிர்பாராத விதமானது. அனைத்து துறைகளின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து நடந்த இடங்களை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு உள்ளனர். தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வு அறிக்கையின்படி தீ விபத்து நடந்த பகுதிகள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால் தான் நலத்திட்டங்களை பெற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. ஏழை எளிய மக்களுக்கும், தொண்டர்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக சென்று சேரும். 5 வருடங்களுக்கு ஒரு முறை அ.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்துவதன் முதல் படியாக, உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் காலத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது இளைஞர்களும், மாணவர்களும் அ.தி.மு.க.வில் இணைய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1½ கோடியில் இருந்து நிச்சயம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- காவிரி விவகாரத்தில் என்ன மாதிரியான ஆலோசனை நடத்தப்பட்டது?
பதில்:- காவிரியில் கர்நாடகத்திடம் இருந்து இந்த வருடம் தமிழகத்துக்கு 81 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டிய பாக்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பட்ட பயிர் களுக்கு தண்ணீர் அவசியமாக தேவைப்படுகிறது. அவர்களுக்கு தரவேண்டிய கடமை இருக்கிறது. அதை கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதை கேட்டதற்கு மறுத்து உள்ளார்கள். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- காவிரி தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் தேவை என்றால் கடல் நீரை சுத்தி கரித்து பயன்படுத்தலாம் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?
பதில்:- 17 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தீவிர விசாரித்து வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின்படி நமக்கு உரிமை இருக்கிறது. சுப்பிரமணியசாமி அவ்வாறு கூறியிருந்தால் அதற்கான காரணத்தை அவர்தான் கூறவேண்டும்.
கேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து அரசு துறை ஊழியர்கள் போராட்டங்களை அறிவித்து உள்ளார்களே?
பதில்:- 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. நிர்வாகத்தில் பல சிரமங்களை பெறவேண்டிய நிலை உள்ளது. இவைகளை தவிர்த்து பஸ் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டிய நிலை உள்ளது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் அண்டை மாநிலங்களை விட குறைவாகத்தான் இருக்கிறது.
கேள்வி:- தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்துக்கான உரிமைகளை கேட்டு பெறாமல் ஆடு, மாடுகள் போல் செயல்படுகிறார்கள் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?
பதில்:- சுப்பிரமணியசாமி சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?.
கேள்வி:- துணை வேந்தர்கள் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் தரப்படுவதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே?
பதில்:- விசாரணையில் ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது எதிர்பாராத விதமானது. அனைத்து துறைகளின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து நடந்த இடங்களை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு உள்ளனர். தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வு அறிக்கையின்படி தீ விபத்து நடந்த பகுதிகள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால் தான் நலத்திட்டங்களை பெற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. ஏழை எளிய மக்களுக்கும், தொண்டர்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக சென்று சேரும். 5 வருடங்களுக்கு ஒரு முறை அ.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்துவதன் முதல் படியாக, உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் காலத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது இளைஞர்களும், மாணவர்களும் அ.தி.மு.க.வில் இணைய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1½ கோடியில் இருந்து நிச்சயம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story






