என் மலர்
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜாங்கம்
கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் மரணம்
கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜாங்கம் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் 1974-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1984-ம் ஆண்டில் ராஜாசபா உறுப்பினராக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97.
ராஜாங்கத்தின் உடல் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். #Tamilnews
கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் 1974-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். 1984-ம் ஆண்டில் ராஜாசபா உறுப்பினராக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97.
ராஜாங்கத்தின் உடல் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். #Tamilnews
Next Story






