என் மலர்
செய்திகள்

காளையார்கோவிலில் கடையை உடைத்து ரூ. 3 லட்சம் பொருட்கள் கொள்ளை
சிவகங்கை:
காளையார் கோவிலை சேர்ந்தவர் தேவி. இவர் அதே பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தேவி வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்தனர்.
பின்னர் உள்ளே இருந்த பலசரக்கு சாமான்கள், பிரிட்ஜ், கிகெரட், பீடி, பண்டல்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.
கொள்ளை குறித்து காளையார்கோவில் போலீசில் தேவி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே பீதியடைந்து உள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கையை மேற் கொண்டு சமூகவிரோதிகளை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.