என் மலர்
செய்திகள்

விபத்தில் பலியான செல்லமுத்து
அடையாளம் தெரியாத வாகனம் மோதி உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பலி
திண்டல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல முத்து(வயது56). இவரது மனைவி ராஜாமணி. இவர்களது மகன் நவீன் (28). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
செல்லமுத்து உளவுப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பவளத்தாம் பாளையத்தில் இருந்து மூலப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
பவளத்தாம் பாளையத்தை அடுத்து வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்லமுத்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செல்லமுத்துவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்ல முத்து பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடுக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல முத்து(வயது56). இவரது மனைவி ராஜாமணி. இவர்களது மகன் நவீன் (28). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
செல்லமுத்து உளவுப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பவளத்தாம் பாளையத்தில் இருந்து மூலப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
பவளத்தாம் பாளையத்தை அடுத்து வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்லமுத்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செல்லமுத்துவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்ல முத்து பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடுக்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






