என் மலர்
செய்திகள்

அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும்: சத்தியா எம்.எல்.ஏ. பேட்டி
அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் எம்.சி. சம்பத்தை நீக்க வேண்டும் என்று சத்தியா எம்.எல்.ஏ. கூறினார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தா சலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள்.
அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி அமைச்சர் சம்பத்திடம் இருந்து கனிமவளத்துறை, பறிக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விட்டார்.

தொடர்ந்து எம்.சி. சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்யாபன்னீர்செல்வம், பாண்டியன், முருகு மாறன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்.
எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் சி.வி.சண்முகம் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அந்த திட்டங்களை செயல்பட விடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கும், எங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதற்காகவும் நாங்கள் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிகிறோம்.
எங்கள் சுயநலத்திற்காக நாங்கள் பேசவில்லை. மக்களுக்காக தான் கோரிக்கை வைக்கிறோம். அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக பேசி முடிவு செய்துள்ளோம்.
எனவே சமரச பேச்சுக்கு இடம் இல்லை. யாரும் எங்களிடம் சமரசம் பேசவில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.அருண் மொழிதேவன் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் சென்னை வந்ததும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்போம்.
அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தா சலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள்.
அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி அமைச்சர் சம்பத்திடம் இருந்து கனிமவளத்துறை, பறிக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விட்டார்.

தொடர்ந்து எம்.சி. சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்யாபன்னீர்செல்வம், பாண்டியன், முருகு மாறன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்.
எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் சி.வி.சண்முகம் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அந்த திட்டங்களை செயல்பட விடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கும், எங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதற்காகவும் நாங்கள் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிகிறோம்.
எங்கள் சுயநலத்திற்காக நாங்கள் பேசவில்லை. மக்களுக்காக தான் கோரிக்கை வைக்கிறோம். அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக பேசி முடிவு செய்துள்ளோம்.
எனவே சமரச பேச்சுக்கு இடம் இல்லை. யாரும் எங்களிடம் சமரசம் பேசவில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.அருண் மொழிதேவன் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் சென்னை வந்ததும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்போம்.
அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






