என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு: செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் நேரில் ஆறுதல்
    X

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு: செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் நேரில் ஆறுதல்

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    செங்கல்பட்டு:

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழங்கள் கொடுத்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்தார். நேற்று காலை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கினார்.

    முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், நகர செயலாளர்கள் ரவி, ரங்கன், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மார்க்கெட் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×