என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே சிறுமியை கட்டாயப்படுத்தி வாலிபர் பாலியல் பலாத்காரம்: பெண் குழந்தை பிறந்தது
Byமாலை மலர்14 Oct 2017 10:09 AM GMT (Updated: 14 Oct 2017 10:09 AM GMT)
வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் மைசூரில் இருந்தார். அவ்வப்போது அவர்கள் எலத்தூர் செட்டிபாளையத்துக்கு வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கோபி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இது அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று சிறுமியிடம் அவர்கள் விசாரித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(29) என்பவர்தான் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், ‘‘நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து எனது மகளை ரமேஷ்குமார் கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் மைசூரில் இருந்தார். அவ்வப்போது அவர்கள் எலத்தூர் செட்டிபாளையத்துக்கு வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கோபி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இது அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று சிறுமியிடம் அவர்கள் விசாரித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(29) என்பவர்தான் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், ‘‘நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து எனது மகளை ரமேஷ்குமார் கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X