என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி
    X

    மதுராந்தகம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

    மதுராந்தகம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மீது ரெயில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், வண்டிக்குப்பம் நகரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் வெங்கடேசபுரம் சாலையில் சென்றார்.

    அப்போது ரெயில் வருவதையொட்டி அங்குள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. ஆனால் தசரதன் மோட்டார் சைக்கிளோடு தடுப்பை தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தசரதன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 32) கூலித் தொழிலாளி. இவர் மதுராந்தகம் - சூனாம்பேடு சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தமிழ்ச்செல்வன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    Next Story
    ×