என் மலர்
செய்திகள்

மதுக்கடை ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டவில்லை: எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம்
டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியதாகவும், பணிக்கு இடையூறு செய்ததாகவும் கூறுவது பொய்யான தகவல், டாஸ்மாக் ஊழியர்களை நான் மிரட்டவில்லை என்று எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.வி. ராமலிங்கம். இவர் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
இந்த புகார் குறித்து எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்க வேண்டிய மதுபானங்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். சில கடைகளில் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்கிறார்கள்.
இன்னும் சில கடைகளில் மது குடிக்க வருபவர்கள் ரூ.500 கொடுத்தால் அவர்களிடம் மீதி பணத்தை கொடுக்காத நிலை கூட உள்ளது. இது போன்று பல புகார்கள் எனக்கு வந்தன.
எனவே ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் நடவடிக்கை எடுத்தேன். எனது அலுவலகத்துக்கு அழைத்து ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என்று விளக்கம் கேட்டேன்.
மேலும் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய சொல்லியுள்ளேன். புகார் கூறப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பில் வாங்கி ஆய்வு செய்யவும் கூறி உள்ளேன்.
ஒருவேளை அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பது உறுதியானால் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் கூறி உள்ளேன்.
ஆனால் ஆட்களை அனுப்பி டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியதாகவும், பணிக்கு இடையூறு செய்ததாகவும் கூறுவது பொய்யான தகவல். டாஸ்மாக் ஊழியர்களை நான் மிரட்டவில்லை.
அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றது பற்றி கேட்டதால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இது பற்றி கலால் துறை அதிகாரியிடமும், டாஸ்மாக் மேலாளரையும் போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டேன்.
அமைச்சர், கலெக்டரிடமும் இதுபற்றி கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம் கூறினார்.
ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.வி. ராமலிங்கம். இவர் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
இந்த புகார் குறித்து எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்க வேண்டிய மதுபானங்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். சில கடைகளில் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்கிறார்கள்.
இன்னும் சில கடைகளில் மது குடிக்க வருபவர்கள் ரூ.500 கொடுத்தால் அவர்களிடம் மீதி பணத்தை கொடுக்காத நிலை கூட உள்ளது. இது போன்று பல புகார்கள் எனக்கு வந்தன.
எனவே ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் நடவடிக்கை எடுத்தேன். எனது அலுவலகத்துக்கு அழைத்து ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என்று விளக்கம் கேட்டேன்.
மேலும் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய சொல்லியுள்ளேன். புகார் கூறப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பில் வாங்கி ஆய்வு செய்யவும் கூறி உள்ளேன்.
ஒருவேளை அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பது உறுதியானால் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் கூறி உள்ளேன்.
ஆனால் ஆட்களை அனுப்பி டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டியதாகவும், பணிக்கு இடையூறு செய்ததாகவும் கூறுவது பொய்யான தகவல். டாஸ்மாக் ஊழியர்களை நான் மிரட்டவில்லை.
அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றது பற்றி கேட்டதால் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இது பற்றி கலால் துறை அதிகாரியிடமும், டாஸ்மாக் மேலாளரையும் போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டேன்.
அமைச்சர், கலெக்டரிடமும் இதுபற்றி கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம் கூறினார்.
Next Story