என் மலர்
செய்திகள்

‘பேஸ்புக்’ மூலம் மலர்ந்த காதல்: கல்லூரி மாணவியை உயிரோடு எரித்த காதலன்
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற காதலனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந் தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தலை மற்றும் முகத்தில் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சந்திரசேகரன் அந்த பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் சுயநினைவு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து அவர் யார்? எந்த ஊர்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சுயநினைவு பெற்றார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் கூறியதாவது:-
எனது பெயர் சக்தி. சொந்த ஊர் சென்னை கொளத்தூர். நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கும், சேலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முரளி என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அவரை நான் நம்பினேன். கடந்த 28-ந்தேதி அவர் சென்னைக்கு வந்து என்னை ஒரு காரில் அழைத்து சென்றார்.
அங்கிருந்து நாங்கள் மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்றோம். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறினார். திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து வந்தார். அங்குள்ள சாலையோர கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அப்போது நமக்கு வாழ்க்கை நடத்த போதிய பணம் இல்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்று முரளி கூறினார்.
இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றோம். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள். அவளை கொன்று விட்டு இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
திடீரென்று அவர் எனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். நான் அலறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர்.
இவ்வாறு சக்தி கண்ணீர் மல்க கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்னையில் உள்ள சக்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உடனே வருமாறு அழைத்தனர்.
அவர்களும் நேற்று மாலை பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் தனது மகள் சக்தியை பார்த்து கண்ணீர் வடித்தனர். அதன் பின்னர் பெற்றோருடன் சக்தியை சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்து விட்டு தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற காதலன் முரளி தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முரளி ‘பேஸ்புக்’ மூலம் வேறு பெண்களையும் இதுபோன்று ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந் தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தலை மற்றும் முகத்தில் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சந்திரசேகரன் அந்த பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் சுயநினைவு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து அவர் யார்? எந்த ஊர்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சுயநினைவு பெற்றார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் கூறியதாவது:-
எனது பெயர் சக்தி. சொந்த ஊர் சென்னை கொளத்தூர். நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கும், சேலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முரளி என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அவரை நான் நம்பினேன். கடந்த 28-ந்தேதி அவர் சென்னைக்கு வந்து என்னை ஒரு காரில் அழைத்து சென்றார்.
அங்கிருந்து நாங்கள் மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்றோம். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறினார். திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து வந்தார். அங்குள்ள சாலையோர கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அப்போது நமக்கு வாழ்க்கை நடத்த போதிய பணம் இல்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்று முரளி கூறினார்.
இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றோம். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள். அவளை கொன்று விட்டு இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
திடீரென்று அவர் எனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். நான் அலறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர்.
இவ்வாறு சக்தி கண்ணீர் மல்க கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்னையில் உள்ள சக்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உடனே வருமாறு அழைத்தனர்.
அவர்களும் நேற்று மாலை பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் தனது மகள் சக்தியை பார்த்து கண்ணீர் வடித்தனர். அதன் பின்னர் பெற்றோருடன் சக்தியை சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்து விட்டு தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற காதலன் முரளி தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முரளி ‘பேஸ்புக்’ மூலம் வேறு பெண்களையும் இதுபோன்று ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






