என் மலர்
செய்திகள்

ஊருக்குள் புகுந்த காட்டெருமை.
சத்தியமங்கலம் அருகே 2-வது நாளாக ஊருக்குள் சுற்றி திரியும் காட்டெருமை
சத்தியமங்கலம் அருகே 2-வது நாளாக ஊருக்குள் சுற்றி திரியும் காட்டெருமை மயக்க ஊசி போட்டு பிடிக்க தீவிர நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கி உள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. பொதுவாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுவது அரிது.
ரோட்டோரம் அவ்வப்போது ஒன்றிரண்டு காட்டெருமைகள் மேயும். பிறகு அடர்ந்த வனத்துக்குள் சென்றுவிடும்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சத்தியமங்கலம் அருகே சின்னட்டி பாளைம்,புளியங்கோம்பை வழியாக ஆஜாணுபாகு தோற்றம் கொண்ட ஒரு காட்டெருமை சதுமுகை ஊருக்குள் புகுந்தது.
திடீரென ஊருக்குள் காட்டெருமை புகுந்ததை கண்ட கிராம மக்கள் பீதி அடைந்தனர். அந்த காட்டெருமையை விரட்ட முயன்றனர்.
தாரை-தப்பட்டை அடித்து விரட்டினர்.ஆனால் அந்த காட்டெருமை காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்தது.
இன்று(வியாழக்கிழமை) அந்த காட்டெருமை 2-வது நாளாக ஊருக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருக்கிறது. அந்த காட்டெருமை இன்று கொடிவேரி, சதுமுகை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதையொட்டி சத்தி வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டெருமை அருகே யாரும் செல்ல வேண்டாம். எப்படியும் அதனை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறினர்.
பட்டாசு வெடித்து மற்றும் தப்பட்டை அடித்து காட்டெருமையை இன்று எப்படியும் காட்டுக்குள் விரட்டி விட வேண்டும், இல்லாத பட்சத்தில் அதனை மயக்க ஊசி போட்டு பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. பொதுவாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுவது அரிது.
ரோட்டோரம் அவ்வப்போது ஒன்றிரண்டு காட்டெருமைகள் மேயும். பிறகு அடர்ந்த வனத்துக்குள் சென்றுவிடும்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சத்தியமங்கலம் அருகே சின்னட்டி பாளைம்,புளியங்கோம்பை வழியாக ஆஜாணுபாகு தோற்றம் கொண்ட ஒரு காட்டெருமை சதுமுகை ஊருக்குள் புகுந்தது.
திடீரென ஊருக்குள் காட்டெருமை புகுந்ததை கண்ட கிராம மக்கள் பீதி அடைந்தனர். அந்த காட்டெருமையை விரட்ட முயன்றனர்.
தாரை-தப்பட்டை அடித்து விரட்டினர்.ஆனால் அந்த காட்டெருமை காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்தது.
இன்று(வியாழக்கிழமை) அந்த காட்டெருமை 2-வது நாளாக ஊருக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருக்கிறது. அந்த காட்டெருமை இன்று கொடிவேரி, சதுமுகை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதையொட்டி சத்தி வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டெருமை அருகே யாரும் செல்ல வேண்டாம். எப்படியும் அதனை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறினர்.
பட்டாசு வெடித்து மற்றும் தப்பட்டை அடித்து காட்டெருமையை இன்று எப்படியும் காட்டுக்குள் விரட்டி விட வேண்டும், இல்லாத பட்சத்தில் அதனை மயக்க ஊசி போட்டு பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
Next Story






