என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி தடை: மக்கள் உரிமைகளை பாதிக்கும் - கனிமொழி எம்.பி.
    X

    மாட்டு இறைச்சி தடை: மக்கள் உரிமைகளை பாதிக்கும் - கனிமொழி எம்.பி.

    நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை கொண்டு வந்திருப்பது மக்களின் உரிமைகளை பாதிக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம் நாட்டில் மாட்டு இறைச்சிக்கு தடை என்பது ஏற்றக்கொள்ள முடியாத ஓன்று இந்திய மக்கள் பல்வேறு உணவு பழக்கங்கள், பல்வேறு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் பல பேர் மாடிறைச்சியும்,மற்ற வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள்.

    அப்படியிருக்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட உணவு சாப்பிடக்கூடாது என்று நாடு முழுவதும் தடை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நிச்சயமாக மக்களின் உரிமை, மாநிலத்தின் உரிமைகளில் தலையிடக்கூடியதாகும்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு உணவு பழக்கவழக்கங்கள் உண்டு.அதில் தலையிட்டு மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று மத்திய அரசு முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழக அரசு இதை எதிர்த்து முறையிட வேண்டும் மத்திய அரசியிடம் இதை ஏற்றக்கொள்ளமாட்டோம் என்று வலியுறுத்தவேண்டும்.இதுவரை மாநில அரசு மத்திய அரசை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை... இனியாவது சொல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×