search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி
    X

    பிளஸ்-2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி

    பிளஸ்-2  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 26,089 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.69 சதவீதம் ஆகும்.
    ஈரோடு:

    பிளஸ்-2  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. மாநில முதலிடம் மற்றும் மாவட்ட முதலிடம் பெற்ற மாணவர்கள் முதல் முறையாக இந்த தேர்வு முடிவு மூலம் அறிவிப்படவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் 26983 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பரீட்சை எழுதினர். இதில் 26,089 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.69 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் மாநிலஅளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தட்டிச்சென்றது.
    Next Story
    ×