search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு- பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு
    X

    தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு- பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு

    • வரும் 19ம் தேதி பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசதியத்தை வலியுறுத்தி திருவான்மியூர் கடற்கரையில் இன்று காலை பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×