என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடரும் கனமழை- 100 கமோண்டோ வீரர்களுடன் தயார் நிலையில் மீட்பு படையினர்
    X

    தொடரும் கனமழை- 100 கமோண்டோ வீரர்களுடன் தயார் நிலையில் மீட்பு படையினர்

    • விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
    • தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் தற்போது பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது. பருவமழை காரணமாக வருகின்ற 23ஆம் தேதி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று கன முதல் அதிக கன மழை வரை பெய்யும். 22 மற்றும் 23ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே நேற்று முன்தினம் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குட்டைகளில் நீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியதால் கிராமங்கள் மழை நீரில் சூழ்ந்தது. விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. தரைப்பாலம் மூழ்கியதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் மூன்று பசு மாடுகள் உயிரிழந்தது.

    இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாக அந்தமானில் நேற்று முன் தினம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பருவ மழையின் தொடர்ச்சியாக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சுகாதாரத்துறை , வருவாய்த்துறை, பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.


    திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். கோவை மண்டல தீயணைப்பு துறை இணை ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை திருப்பூர் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் மற்றும் இளஞ்செழியன் உள்ளிட்டோருடன் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு தேவைப்பட்டாலும் செல்வதற்கான தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் திருப்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் அவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது, மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது, ஆழமான பகுதிக்குள் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக பயிற்சியுடன் கூடிய 100 கமோண்டோ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    Next Story
    ×