என் மலர்
டென்னிஸ்

Salabelnka | இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினர் ஸ்வரேவ், சபலென்கா
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 7-6 (7-6), 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஆர்தர் பில்சை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






