என் மலர்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பொர்னில் நடந்து வருகின்றன. தற்போது 4வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஸ்வரேவ் இரண்டாவது செட்டை 2-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஒல்காவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






