என் மலர்
டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரிபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






