என் மலர்
டென்னிஸ்

துபாய் கண்காட்சி போட்டி: நம்பர் 1 வீராங்கனையை தோற்கடித்தார் ஆஸ்திரேலிய வீரர்
- துபாயில் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
- இதில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் வெற்றி பெற்றார்.
துபாய்:
அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார். மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
இந்நிலையில், துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதினார்.
இதில் நிக் கிரிகியோஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Next Story






