என் மலர்
டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சீனாவின் ஷான் ஜுன்செங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதுகிறார்.
Next Story






