என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    Next Story
    ×