என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உண்மையான கோப்பை எனது அணிதான்- சூர்யகுமார் யாதவ்
- வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
- என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர்.
துபாய்:
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.
2 நாட்களில் இரண்டு தொடர்ச்சியான நல்ல ஆட்டங்கள். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். மேலும் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் அதை நன்றாகச் சுருக்கமாக கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
Next Story






