என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புஜாரா ஓய்வு குறித்து விராட் கோலி சொன்னது இதுதான்
    X

    புஜாரா ஓய்வு குறித்து விராட் கோலி சொன்னது இதுதான்

    • கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
    • 103 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 3 இரட்டை சதம் உள்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து 'சுவர்' என அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக விளையாட்டு வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ஓய்வு அறிவித்த புஜாராவிற்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, விராட் கோலி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு அற்புதமான தொழில் வாழ்க்கை அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள், இனிமேல் நடக்கவிருக்கும் காரியங்களுக்கு வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×