என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இலங்கை கேப்டன் பொறுப்பில் இருந்து அசலங்கா அதிரடி நீக்கம்
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
- இதில் கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார்.
கொழும்பு:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பில் இருந்து சாரித் அசலங்கா அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இலங்கை தேர்வு குழு தலைவர் பிரமோதயா விக்ரமசிங்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானில் விளையாடிய போது குண்டு வெடித்ததால் பாதுகாப்பு அச்சத்தால் அசலங்கா பாதியில் நாடு திரும்பினார். அங்கு தொடர்ந்து விளையாடும்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியும் அவர் அதை ஏற்காததே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அசலங்கா ஒரு வீரராக தொடருகிறார்.
Next Story






