டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் ஃபர்ஹான் 73 ரன்கள் விளாசினார்.அமெரிக்கா அணி தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on

கொழும்பு:

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ஃபர்ஹான் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 19 ரன்னிலும் சல்மான் ஆகா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஃபர்ஹான் மற்றும் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் தடுமாறிய பாபர் அசாம் அடுத்த அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபர்ஹான் அரை சதம் விளாசினார். அவர் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதனை தொடர்ந்து வந்த நவாஸ் 5 ரன்னிலும் ஃபஹீம் அஷ்ரஃப் 1 ரன்னிலும் வெளியேறினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய சதாப் கான் 12 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா அணி தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com