என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருது வென்றார் ஷபாலி
- தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்:
சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நவி மும்பையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் 87 ரன் குவித்ததுடன் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார்.
அவரது இந்த அபார ஆட்டத்தால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறந்த வீரர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
Next Story






