என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சர்ப்ராஸ் கான் மருத்துவமனையில் அனுமதி
- காலிறுதியில் மும்பை, கர்நாடகா உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
- அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. (அக்டோபர் 15, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை). குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்த நிலையில் காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.
காலிறுதியில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பெங்கால், ஆந்திரா, மும்பை, கர்நாடகா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் காலிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.
அவரது நிலைமை ஸ்டேபிள் என்றாலும், முழு ரெக்கவரி 3-4 நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக ஃபீல்டிங் செய்யவில்லை.
மும்பை அணி இப்போது ஷர்துல் தாகூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோருடன் வலுவாக உள்ளது. ஆனால் சர்ஃபராஸ் இல்லாமல் பேட்டிங் ஆர்டர் பாதிக்கப்படலாம்.






